24 ஆண்டுகள் கடந்தன..பெட்டிக்குள்இருந்த ரூபாய் நோட்டுகள் செல்லரிக்கப்பட்டன..ஆனால்
Featured
-
அமெரிக்கா
அமெரிக்காவின் முருகன் ஆலயங்கள்
-
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் முருகன் ஆலயங்கள்
-
இங்கிலாந்து
இங்கிலாந்தின் முருகன்ஆலயங்கள்
-
இந்தியா
இந்தியாவின் முருகன் ஆலயங்கள்.
-
இலங்கை
-
கனடா
கனடாவில் உள்ள முருகன் ஆலயங்கள்
-
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து முருகன் ஆலயங்கள்
-
சேலம்
-
ஜெர்மனி
ஜெர்மனியில் உள்ள முருகன் ஆலயங்கள்
-
திருச்சி
-
மலேசியா
மலேசியவின் முருகன் ஆலயங்கள்
Latest
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் , (பி.1850-52அ,இ.மே 30,1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது. வாழ்க்கைக் குறிப்பு பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார். இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர். 1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார். 1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை […]
பால தேவராயன்

பால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி “காக்க” இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடி இறைவனைவேண்டும்கவசங்கள் ஆறு 1. சிவ கவசம். 2. கந்த சஷ்டி கவசம், 3. சண்முக கவசம், 4. சத்தி கவசம், 5. விநாயகர் அகவல் 6. நாராயண கவசம் இவைகளில் கவசங்களில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மீக அன்பர்கள் பெரிதும் பாடி வேண்டும் கவசம் கந்த சஷ்டி கவசமாகும் இதனை இயற்றிய முனிவர் பாலதேவராயன் ஆவார். [கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஆக்குநர்: Yokishivam]
சுப்ரமணியர் மந்திரங்கள்

சுப்ரமணியர் காயத்ரி “ஓம் தத் புருஷாய வித்மஹே மஹா ஸேநாய தீமஹி தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்” ஸ்கந்த காயத்ரி ஓம் கார்த்திகேயாய வித்மஹே! சக்தி ஹஸ்தாய தீமஹீ! தந்தஸ்கந்த: ப்ரசோதயாத்!! சுப்ரமணியர் மந்திரங்கள் ஸ்கந்தர்:-ஓம் ஸ்ரூம்ஸ்கந்தாய நம: சுப்ரமணியர்:-ஓம்ஸெளம் ஸுப்ரமண்யாய நம: குமாரர்:-ஓம் க்ரூம் குமாரய நம: குஹர்:-ஓம் ஸீம் ஸவாமி குஹாய நம: சரவணபவர்:-ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம: ஷண்முகர்:-ஓம் ஹ்ரீம் ஹம் ஷண்முகாய நம: அதிவிஷேசமான ஸ்ரீ சிவசுப்பிரமணிய த்ரிசதி கந்தபிரானது த்ரிசத நாம அருச்சனை என்பது முருகவேளது திவ்ய திருநாமங்கள் முந்நூ று கொண்டதாகும்.ஒவ்வொரு திருநாமமும் பிரணவமும் பீஜ அக்கரங்களையும் பெற்றுள்ளது.இதனால் இது மாபெரும் மந்திரமாகும்.இதனை கந்தவிரத நாட்களாகிய கார்த்திகை சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் அன்புடன் நியமமாக அருச்சிப்போர் வறுமை நீங்கி பகை அழிந்து வற்றாத வளமெல்லாம் பெற்று வாழ்வார் என்பது உறுதி. ஓம் நம் ஸெளம் ஸ்ரீம் சரவணபவ,ஸத்யோஜாத ஹ்ருதய, ப்ரம்ஹ ஸ்ருஷ்டி காரண சுப்ரஹ்மண்ய சிவநாதாய நமஹ. ஓம் நிர்லோபாய நமஹ ஓம் நிஷ்களாய நமஹ ஓம் நிர்மோஹாய நமஹ ஓம் நிரஞ்ஜநாய நமஹ ஓம் நிர்விகாராய நமஹ ஓம் நிராபாஸாய நமஹ ஓம் நிர்விகல்பாய நமஹ ஓம் நிராலம்பாய நமஹ ஓம் நித்யத்ருப்தாய நமஹ 10 ஓம் நிரவத்யாய நமஹ ஓம் நிருபத்ரவாய நமஹ ஓம் நிதீசாய நமஹ ஓம் நிர்ணயப்ரியாய நமஹ ஓம் நித்யயோகீசாய நமஹ ஓம் நிர்ணயசித்தாய நமஹ ஓம் நிதீநாம் பதயே நமஹ ஓம் நித்ய நியமாய நமஹ ஓம் நிஷ்காரணாய நமஹ ஓம் நிஸ்ஸங்காய நமஹ 20 ஓம் நிதிப்ரியாய நமஹ ஓம் நித்ய பூதாய நமஹ ஓம் நித்ய கல்யாண சுசீலாய நமஹ ஓம் நித்ய வஸ்துநே நமஹ ஓம் நித்யாநந்த குரவே நமஹ ஓம் நியந்த்ரே நமஹ ஓம் நியமாய நமஹ ஓம் நித்ய யோகீஸாûpப்ரியவரதாய நமஹ ஓம் நாகேந்த்;ர ஸேவிதாய நமஹ […]
அறுமுகநூறு – கவிஞர் சச்சிதானந்தம்

தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி! 11 அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி, அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி, தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி, விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி! 12 ஐந்தமு துணவின் சுவையே போற்றி, நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி! வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி, பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி! 13 இசைக்கு மயங்கும் இறைவா போற்றி, இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி, இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி, இருண்ட இதயம் களைவோன் போற்றி! 14 வாரம் கடந்து, வருடம் கடந்து, வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து, காமம் கடந்து, கவலை கடந்து, கந்தன் அருளின் கருணை அடைவோம்! 15 சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து, உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து, எதிலும் நிலையா மனதை மறந்து, கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்! 16 தா ளிரெண்டும் தீ யாக, தோ ளிரெண்டும் பூ வாக, மேனிஎங்கும் நீ ரோட, வா என்றாய் தா விவந்தேன்!17 பிடியோடு உறவாடும் உன்னண் ணனை, பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை, விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை, படியேறி வருகையில் பாடுகின் றேன்!18 கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும், படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்? நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம், மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்!19 அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும், சரவணா! சரவணா! சிகரங்கள் … 20 அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும், அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும், அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும், அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்!21 அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான், அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான், அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை, அள்ளிக் கொடுத்து அகிலம் […]
அருணகிரிநாதர்

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் […]
செல்வாய் சீன மண்ணை நோக்கி..
செல்வாய் சீன மண்ணை நோக்கி……………..,,,,, வெல்வாய் அந்த கொரோனோசை!!!!!!!!!!! வானம் வந்து கவிழ்ந்து உன்னை கானம் கொண்டு வணங்குதே! தானம் என்ன தாளம் என்ன தந்தேன் எனது நெஞ்சையே!! சொல்வதிங்கே யான் என்றாலும் சொல்லவைப்பது நீ அன்றோ வெல்வதிங்கே யாம் என்றாலும் வெல்லவைப்பதும் நீ அன்றோ!!!! கொன்று ஒழியும் நோயாம் அது கொறோனோ வைரசாம்!! சின்னம் சிறு உயிர் எல்லாமும் சிந்தை கலங்கி நிற்குதே!! வெந்தமானுடர் உடலைக்காக்க வேல்பிடித்து வந்தேயானால்!!! சீனம் உந்தன் சிறப்பை நாளும் செப்பிவிட்டு செல்லுமே!!!! தமிழர் கடவுள் என்றால் என்ன! சீனர் கடவுள் என்றால் என்ன! எல்லாமுமே நீ தான் கந்தா!!!! எல்லாமுமே நீ தான்!!! எழுவாய் !!உன் இடத்திருந்து செல்வாய் !!சீன மண்ணை நோக்கி வெல்வாய் !!!அந்த கொரோனசை வாழவை அந்த மனித்த்தை!!!!!! sri bava
கந்தர் அனுபூதி

காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். நூல் ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே. 1 உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. 2 வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண்முகனே. 3 வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4 மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தை யரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. 5 திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தணியா வதிமோக தயா பரனே. 6 கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7 https://www.kanthakottam.com/mp3/kanthar_anupoothi.mp3 அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே. 8 மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9 கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. 10 கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகாசல வேலவ நாலு கவித் […]
கந்தசட்டி கவசம் – திருவாவினன்குடி

திருவாவினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா யிரம் வெள்ளம் யோகம் படைத்தவா திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா இலட்சத்திருநான்கு நற்றம்பி மாருடன் பட்சத்துடனே பராசக்தி வேலதாய் வீர வாகு மிகுதள கர்த்தனாய் சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா கயிலாய மேவும் கனக சிம்மாசனா மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்தவா சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக் கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா திருவருணகிரி திருப்புகழ் பாட இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா ஆயிரத்தெட்டாம் அருள்சிவ தலத்தில் பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா எண்ணா யிரம் சமண் எதிர்கழு வேற்றி விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா குருவாம் பிரமனைக் கொடும்சிறை வைத்தே உருபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன் கருதிமெய் யோகம்சொல்லியது ஒருமுகம் அருள்பெறு மயில்மீ (து) அமர்ந்த (து) ஒருமுகம் வள்ளிதெய் வானையை மருவிய (து) ஒருமுகம் தெள்ளுநான்முகன் போல் சிருட்டிப்ப (து) ஒருமுகம் சூரனை வேலால் துணித்த (து) ஒருமுகம் ஆரணம் ஓதும் அருமறை யடியார் தானவர் வேண்டுவ தருவ (து) ஒருமுகம் ஞானமுதல்வருக்கு நற்பிள்ளை பழநி திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம கூரகம் ஆவினன்குடியாய் நமோநம சர்வ சங்கரிக்குத் தனயா நமோநம உறுசோலைமலைமேல் உகந்தாய் நமோநம எல்லாக்கிரிக்கும் இறைவா நமோ நம சல்லாப மாக சண்முகத்துடனே எல்லாத் தலமும் இனிதெழுந்தருளி உல்லாசத்துறும் ஓங்கார வடிவே மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை சாலமுக்கோணத் தந்தமுச் சக்தியை வேலாயுதமுடன் விளங்கும் குகனைச் சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை கைலாச மேருவாகாசத்தில் கண்டு பைலாம் பூமியும் பங்கய பார்வதி மேலும் பகலும் […]
முருகனின் 16 வகைக் கோலங்கள்

1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார். 5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது. 6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது. 7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது. 8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. 9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். 10. தாரகாரி : தாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார். 11. சேனானி : இவரை […]
உங்கள் முருகன் ஆலயம்
The Latest News
மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்
இந்த திராவிட அதிசயம் மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்களின் பட்டியலில் , வேல் முருகன் என்ற
சென்னை கந்தகோட்டம்_முருகன் வரலாறு
வள்ளலார் பாடிய சென்னை #கந்தகோட்டம்_முருகன் வரலாறு! 17ம் நூற்றாண்டின் தொடக்க
"பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்".
"கந்தசஷ்டி விரதம் இருந்த பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்".....திருச்செந்