முகப்பு
தைப்பூசம்
- விவரங்கள்
- பகுப்பு: சிறப்பு நாட்கள்
- Tuesday, 31 January 2012 14:22 இல் வெளியிடப்பட்டது
- செந்தில்,
- படிப்புகள்: 22
தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு புண்ணியநன்னாளாகக் கணிக்கப்பட்டு இறைவழிபாட்டுக்குரிய முக்கிய தினமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்துக்களால் கணிக்கப்படும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் எட்டாவதாக அமைகின்றது. தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாளாக அமைவதும் சிறப்புடையது. இந்நாளை தைப்பூசநன்னாளென்று கொண்டு இறைவழிபாட்டிற்கு உத்தமமான நாளாகக் கொள்கின்றோம்.
தைப்பூசநன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது. சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை என்று கூறபடுகின்றது.அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

