Featured
-
அமெரிக்கா
அமெரிக்காவின் முருகன் ஆலயங்கள்
-
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் முருகன் ஆலயங்கள்
-
இங்கிலாந்து
இங்கிலாந்தின் முருகன்ஆலயங்கள்
-
இந்தியா
இந்தியாவின் முருகன் ஆலயங்கள்.
-
இலங்கை
-
கனடா
கனடாவில் உள்ள முருகன் ஆலயங்கள்
-
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து முருகன் ஆலயங்கள்
-
சேலம்
-
ஜெர்மனி
ஜெர்மனியில் உள்ள முருகன் ஆலயங்கள்
-
திருச்சி
-
மலேசியா
மலேசியவின் முருகன் ஆலயங்கள்
Latest
பால தேவராயன்

பால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி “காக்க” இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடி இறைவனைவேண்டும்கவசங்கள் ஆறு 1. சிவ கவசம். 2. கந்த சஷ்டி கவசம், 3. சண்முக கவசம், 4. சத்தி கவசம், 5. விநாயகர் அகவல் 6. நாராயண கவசம் இவைகளில் கவசங்களில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மீக அன்பர்கள் பெரிதும் பாடி வேண்டும் கவசம் கந்த சஷ்டி கவசமாகும் இதனை இயற்றிய முனிவர் பாலதேவராயன் ஆவார். [கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஆக்குநர்: Yokishivam]
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் , (பி.1850-52அ,இ.மே 30,1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது. வாழ்க்கைக் குறிப்பு பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார். இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர். 1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார். 1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை […]
கந்தர் கலி வெண்பா

பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1 நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த போதமுங் காணாத போதமாய் – ஆதிநடு 2 அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3 குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும் செறியம் பரம சிவமாய் – அறிவுக் 4 கனாதியா யைந்தொழிற்கு மப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் – தனாதருளின் 5 பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் – எஞ்சாத 6 பூரணமாய் நிந்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் – தாரணியில் 7 இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும் தந்திரத்தில் சாராது சார்வதுபோல – முந்தும் 8 கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம் 9 ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம் போகஅதி காரப் பொருளாகி – ஏகத்து. 10 உருவும் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் – இருண்மலத்துள் 11 மோகமுறும் பல்லுயிர்க்கும் முத்தி அளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் – தேகமுறத் 12 தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து – மந்த்ரமுதல் 13 ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து – மாறிவரும் 14 ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி எண்பான் ஆரவந்த நான்குநூறாயிரத்துள் – தீர்வரிய 15 கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற் சென்மித்து உழலத் திரோதித்து – வெந்நிரய 16 சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் – தர்க்கமிடும் 17 தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுமே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து – முன்னூல் 18 விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாபோகம் சார்வித்து – அருள்பெருகு 19 சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை […]
கந்தசட்டி கவசம் – திருச்செந்தூர்

காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர சமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் முருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விபச சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்பரி நூலும் முத்தணி மார்பும் […]
திருமுருக கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 – நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார். இயல், இசைக் கல்வி இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். சொற்பொழிவு ஆற்றல் தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி” பாமரர்களுக்கும் புரியும் விதமாக […]
கந்தர் அனுபூதி

காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். நூல் ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே. 1 உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. 2 வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண்முகனே. 3 வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4 மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தை யரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. 5 திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தணியா வதிமோக தயா பரனே. 6 கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7 அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே. 8 மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9 கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. 10 கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா […]
சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் இதை மனமுருக பாராயணம் செய்வோர் தமது தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பர் திருச்செந்திலாண்டவன் அருளும் ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகளின் ஆசியும் ஒருங்கே பெறுவர். 1. ஸதா பாலரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸாபிதா மே விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி : 2. ந ஜாநாமி ஸப்தம் ந ஜாநாமி சார்த்தம் ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம் த சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே முகாந் நிஸ்ஸரத்தே கிரஸ் சாபி சித்ரம் 3. மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம் மநோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம் மஹீவே தேவம் மஹாவேத பாலம் மஹா தேவ பாலம் பஜே லோக பாலம் 4. யதா ஸந்திதாநம் கதா மாநவா மே பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம் 5. யதாப்தேஸ் தரங்கா லயம் யாந்தி துங்கா: ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம் ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் 6. கிரௌ மந்நிவாஸே நரா யே திரூடா: ததா பர்வதே ராஜதே தே திரூடா: இதீவ ப்ருவத் கந்த ஸைலா தே திரூடா ஸ தேவேர முதே மே ஸதா ஷண்முகோ ஸ்து 7. மஹாம்போதி தீரே மஹாபாபசோரே முநீந்த்ராநுகூலே ஸூகந்தாகயஸைலே […]
கந்தகுரு கவசம்

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே. ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுஹா சரணம்; குருபரா சரணம் சரணமடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய் தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய் ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம் திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய் அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே வேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய் வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவே தேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனே திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய் திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய் செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் அடிமுடியறிய வொணா அண்ணா மலையோனே அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா திருப்பரங்கிரி குஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும் திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய் எட்டுக்குடி குமரா ஏவல்பில்லி சூனியத்தை பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய் எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே எங்கும் நிறைந்த கந்தா; எண்கண் முருகா நீ என்னுள்ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் […]
முத்தைத் தரு பத்தித் திருநகை

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ….எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ….அடிபேண பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….இரவாகப் பத்தற்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….ஒருநாளே தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கு ஒக்கு நடிக்கக் கழுகொடு …. கழுதாடத் திக்குப் பரி அட்டப் பயிரவர் தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு சித்ரப் பவுரிக்கு த்ரிகடக ….எனவோதக் கொத்தப் பறை கொட்டக் களமிசை குக்குக் குகு குக்குக் குகுகுகு குத்திப் புதை புக்குப் பிடியென ….முதுகூகை கொட்புற் றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி இட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ….பெருமாளே !
The Latest News

பால தேவராயன்
பால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்

கந்தர் அனுபூதி
காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந்

கந்தர் கலி வெண்பா
பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு 1 நாதமுநா தாந்த முட

கந்தர் அலங்காரம்
காப்பு அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்